அ
கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஓய்வு நேரங்களில் பள்ளியின் பசுமையைப் பேணிக்காப்பது அவர்களின் கடமையாகும். சிற்றுண்டிச்சாலை அருகே உள்ள இடத்தில் மாணவர்கள் காய்கறித்தோட்டம் உருவாக்கியுள்ளது சிறப்புக்குரியதாகும். இந்நடவடிக்கையைப் பள்ளித் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் தினசரி கண்காணித்து வருகின்றனர். இந்நடவடிக்கை பாடத்திட்டத்தினை நடத்த ஆசிரியர்களுக்கும் பாடத்துணைப்பொருளாகப் பங்காற்றுகிறது.